
ஃபகத் பாசில் நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருப்பதாக பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க விக்ரம் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவிருந்தார் பிரேம் குமார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால், இறுதிகட்ட கதை விவாதத்தின் போது விக்ரம் – பிரேம் குமார் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே அப்படம் கைவிடப்பட்டது. இதனால் அக்கதைக்கு வேறொருவரை நாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்தார் பிரேம் குமார்.