• September 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வன்​கொடுமை தடுப்பு சட்ட வழக்​கில் நடவடிக்கை எடுக்​க​வில்லை எனக்​கூறி, காஞ்​சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய காஞ்​சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்​றம், இந்த விவ​காரம் குறித்து விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்ய உயர் நீ்​தி​மன்ற விஜிலென்ஸ் பதி​வாள​ருக்கு உத்​தர​விட்​டுள்​ளது.

காஞ்​சிபுரம் மாவட்​டம் வாலாஜா​பாத் அருகே பூசி​வாக்​கத்​தைச் சேர்ந்த சிவக்​கு​மார் அப்​பகு​தி​யில் பேக்​கரி நடத்தி வரு​கிறார். இக்​கடை​யில் கடந்த ஜூலை மாதம் கேக் வாங்கி சாப்​பிட்ட அதே பகு​தி​யைச் சேர்ந்த பட்​டியலின வகுப்​பைச் சேர்ந்த முரு​கன் என்​பவருக்​கும், கடை உரிமை​யாள​ரான சிவக்​கு​மாருக்​குமிடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *