
புதுடெல்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அவற்றை காலவரையின்றி ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா, கேரளா, பஞ்சாப் மாநில அரசுகள் நேற்று வாதிட்டன. மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்விகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இதில் கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் நேற்று வாதிடுகையில், ‘‘குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்புகளில் விடை உள்ளது.