• September 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 2-வது நாளாக உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்மைப் பணி​யாளர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்​னை​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் துாய்மைப் பணி​யை, தனி​யார் நிறு​வனத்​திடம் மாநக​ராட்சி ஒப்​படைத்துள்​ளதை கண்​டித்​தும், தங்​களை பணி நிரந்​தரம் செய்​யக்​கோரி​யும், துாய்மைப் பணி​யாளர்​கள் ரிப்​பன் மாளிகை முன்பு கடந்த ஆக.1-ம் தேதிமுதல் தொடர்ந்து 13 நாட்​கள் போராட்​டம் நடத்​தினர்.

நீதி​மன்ற உத்​தர​வால், நள்​ளிர​வில் இவர்​கள் கைது செய்​து, குண்​டுக்​கட்​டாக அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர். அதைத்​தொடர்ந்து செப்​. 4-ம் தேதி சிந்​தா​திரிப்​பேட்​டை​யில் உள்ள மே தின பூங்​கா​வில், திடீரென திரண்ட 300-க்​கும் மேற்​பட்ட துாய்மைப் பணி​யாளர்​களை மீண்​டும் குண்​டுக்​கட்​டாக போலீஸ் கைது செய்​தது. இந்த திடீர் போராட்​டத்தை அடுத்து துாய்​மைப் பணி​யாளர்​களின் நடவடிக்​கைகளை போலீ​சார் கண்​காணித்து வந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *