• September 10, 2025
  • NewsEditor
  • 0

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்ட நெடுஞ்​சாலை​யில் உள்ள ஒரு உணவகத்​தில் சமையல​ராக பணிபுரிந்து வருபவர் ரவிந்​தர் சிங் சவு​கான் (30). இவருக்கு கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி வரு​மான வரித் துறையி​லிருந்து ஒரு நோட்​டீஸ் வந்​துள்​ளது. அவருக்கோ அவரது மனை​விக்கோ ஆங்​கிலம் தெரி​யாது என்​ப​தால், அந்த நோட்​டீஸை புறக்​கணித்​து​விட்​டனர்.

பின்​னர் கடந்த ஜூலை 25-ம் தேதி 2-வது முறை​யாக நோட்​டீஸ் வந்​துள்​ளது. இதையடுத்​து, ஆங்​கிலம் தெரிந்​தவர்​களின் உதவியை நாடி உள்​ளார். அப்​போது, வரு​மான வரித் துறை​யின் குவாலியர் கிளை​யில் இருந்து வந்த அந்த நோட்​டீஸில் 2020-21 நிதி​யாண்​டுக்கு வரு​மான வரி பாக்கி ரூ.46 கோடியை செலுத்த வேண்​டும் என கூறப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் வழக்​கறிஞர் உதவி​யுடன் காவல் நிலை​யத்​தில் புகார் செய்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *