
புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டு, மீட்பு பணி மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
டெல்லியில் நேற்று காலை குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஓட்டுப்போட்ட பிரதமர் மோடி, வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட நேற்று மாலை இமாச்சல் பிரதேசம் புறப்பட்டார். நேற்று மதியம் 1.30 மணியளவில் காங்கரா பகுதிக்கும் வந்த பிரதமர் மோடி மண்டி, குல்லு ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அதன்பின் மாநில உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.