
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், செப்.13 முதல் டிச.20-ம் தேதி வரை பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய், செப். 13-ம் தேதி முதல் கட்ட சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார்.
இதற்கான அனுமதி கோரி திருச்சி காவல் ஆணையரிடம் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் விஜய்யின் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில், ஆனந்த் நேற்று மனு அளித்தார்.