
சென்னை: தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர்நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 4 ஆண்டுகளில் தொழில் துறையில் தமிழகத்தை உயர்வான நிலைக்குக் கொண்டு வந்திருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அறியாமையில் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விடுகிறார்.