• September 10, 2025
  • NewsEditor
  • 0

கோவை: டெல்​லி​யில் மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, நிர்​மலா சீதா​ராமன் உள்​ளிட்​டோரை அதி​முக முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் சந்தித்​துப் பேசி​யது அதி​முக கூட்டணியில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்றவர்​களை இணைக்​கும் முயற்​சியை 10 நாட்​களில் தொடங்க வேண்​டும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனிசாமிக்​கு, முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கெடு விதித்​தார்.

இதைத் தொடர்ந்​து, அவரிடம் இருந்த அமைப்​புச் செய​லா​ளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் ஆகிய பதவி​களை பறித்து பழனி​சாமி நடவடிக்கை எடுத்​தார். இந்​நிலை​யில், செங்​கோட்​டையன் நேற்று முன்​தினம் காலை கோவை​யில் இருந்து டெல்​லிக்கு புறப்​பட்​டுச் சென்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *