
மதுரை: தேசிய ஜனநாயக கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும், அவை விரைவில் முடிவுக்கு வரும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு டிடிவி.தினகரன், ஓபிஎஸ் மீண்டும் வர வேண்டும், கூட்டணியில் தொடர வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். வருத்தத்தில் ஒரு முடிவை எடுத்திருப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும், விரைவில் அவை முடிவுக்கு வரும்.