• September 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: திண்​டுக்​கல், தரு​மபுரி உள்​ளிட்ட 12 மாவட்​டங்​களில் இன்று (செப். 10) கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு ஒடிசா– வடக்கு ஆந்​திரா கடலோரப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. மன்​னார் வளை​குடா மற்​றும் அதையொட்​டிய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இவற்​றின் தாக்​கத்​தால் தமிழகத்​தின் பெரும்​பாலான இடங்​களி​லும், புதுச்​சேரி​யிலும் இன்று லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *