
சென்னை: மாநகராட்சி சார்பில், ரூ.30 கோடியில் விருகம்பாக்கம் கால்வாய் சீரமைப்பு பணிகளை துணை முதல்வர் உதயநிதி நேற்று தொடங்கி வைத்தார். விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய் ஆகியவற்றை பராமரிக்கும் உரிமையை, நீர்வள ஆதாரத் துறையிடமிருந்து சென்னை மாநகராட்சி பெற்றுள்ளது.
அதன்படி, விருகம்பாக்கம் கால்வாயை சீரமைக்கவும், அதன் வெள்ள நீர் மேலாண்மையை மேம்படுத்தவும், அதை கூவம் ஆற்றுடன் இணைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.