
சென்னை சூளைமேட்டில் அண்ணாநெடும்பாதை, பஜனைகோயில் தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுவதால், அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, காலை, மாலைவேளைகளில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் அதிக குடியிருப்புகளையும், பல்வேறு வணிக வளாகங்களையும் கொண்ட பகுதிகளில் ஒன்றாக சூளைமேடு இருக்கிறது. வளர்ந்து வரும் சிறு நகரங்களில் ஒன்றாக திகழும் இங்கு பல்வேறு தரப்பு மக்கள் வசிக்கின்றனர்.