
செங்கல்பட்டு நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களுக்கு அருகே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படாததால் பொதுமக்கள் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. செங்கல்பட்டு நகராட்சியில் 11,285 வீடுகள் உள்ளன.
இதில் 493 தெருக்கள் உள்ளன. தற்போது இங்கு மத்திய அரசு தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில் ரூ. 63 கோடி, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வங்கி கடன் வாயிலாக ரூ.62.48 கோடி, தமிழக அரசு ரூ.62.47 கோடி என மொத்தம் 188.25 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக செங்கல்பட்டு நகரில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.