• September 9, 2025
  • NewsEditor
  • 0

ஆம்பூர்: ஓடும் பேருந்தில் தங்க நகையை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரமும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு பேருந்தில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வரலட்சுமி (50) என்பவர் பயணம் செய்துள்ளார். அப்போது, அவரின் 5 பவுன் தங்க நகை மாயமானதாக கோயம்பேடு போலீஸில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் வரலட்சுமியுடன் அதே பேருந்தில் பயணம் செய்த வேலூர் மாவட்டம் திமுக நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி (56) என்பவர் நகை திருட்டில் ஈடுபட்டதை கண்டறிந்து, அவரை கைது செய்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *