• September 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: “கடந்த மூன்றரை ஆண்டு காலமாக கட்சி இணைந்தால்தான் வெற்றி பெற முடியும் என சொல்லி வருகிறேன். இதன் முன்முயற்சியை எடுத்துள்ள செங்கோட்டையனுக்கு என் வாழ்த்துகள்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கெடு விதிக்க, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை பறித்து நடவடிக்கை எடுத்தார் பழனிசாமி. இதனிடையே, டெல்லி சென்றிருந்த செங்கோட்டையன் அங்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்து கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *