• September 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தற்காலிக பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் நல்வழிகாட்டுதலின்படி இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் 5-வது மண்டல அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர் பாபு தலைமையில் பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தங்க சாலை வள்ளலார் நகர் பேருந்து நிலையங்களில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து எம்டிசி பேருந்துகள் இயக்குவது தொடர்பாகவும், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்குவது தொடர்பாகவும் துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *