
புதுடெல்லி: மேக வெடிப்பு, மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்தை இன்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத்துக்கு ரூ.1,500 கோடி நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வான் வழியாக ஆய்வு செய்தார். அதன்பிறகு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம், மறுவாழ்வு நடவடிக்கைகள், சேத மதிப்பீடு ஆகியவை தொடர்பாக காங்க்ரா பகுதியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை மேற்கொண்டார். அப்போது, முதற்கட்டமாக இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.1,500 கோடி நிதி உதவி வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.