
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியின் பின்னால் உள்ள கடற்கரையில் இன்று பலி பீடம் சிற்பம் கரை ஒதுங்கி உள்ளதாக, கடற்கரையில் நடை பயிற்சி மேற்கொண்ட நபர்கள் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் உள்ளிட்ட பல்வேறு புராதான சின்னங்கள் அமைந்துள்ளன. இவற்றை, தொல்லியல் துறை பராமரித்து, பாதுகாத்து வருகிறது. மேலும், புராதன சிற்பங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால், சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.