
சிவகங்கை: திருப்புவனத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள்’ வைகை ஆற்றில் மிதந்த விவகாரத்தில் நில அளவை ஊழியர்களைப் பலிகடா ஆக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக.29-ம் தேதி காலை ‘உங்களு டன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்தன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைக் கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமாரை இடமாற்றம் செய்தும், அலுவலகத்தில் அலட்சியமாகப் பணிபுரிந்த 7 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையையும் மாவட்ட ஆட்சியர் எடுத்தார்.