
கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச் செயலா ளர் பழனிசாமி ஆகியோரின் பிறந்த நாளையொட்டி 5,371 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருக்கோவிலூரில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை யில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பழனிசாமி பேசியதாவது:
தமிழகம் முழுவதும் 139 தொகுதிகளில் சுற்றிவந்து 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். தற்போது திருக்கோவிலூர் மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய இரு தொகுதி மக்கள் இங்கு திரண்டு வந்திருப்பதை, ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாகவே நான் பார்க்கிறேன். இன்று தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.