
கடலூர்: சிதம்பரத்தில் கடந்த 5-ம் தேதி லால்கான் தெருவில் உள்ள நவாப் பள்ளிவாசலில் சிதம்பரம் ஜவகர் தெருவைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (45) என்பவர், அவரது ஆதரவாளர்கள் சிலரை அழைத்துக் கொண்டு சென்றார். அங்கு நவாப் பள்ளிவாசல் நிர்வாகிகளும், சிதம்பரம் காய்கறி மார்க்கெட் தெருவில் உள்ள லால்கான் பள்ளிவாசல் நிர்வாகிகளும் இருந்தனர்.
அவர்களிடம் முகமது இஸ்மாயில் தரப்பினர் கணக்கு வழக்குகள், சொத்து விவரங்களை கேட்டனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.