
புதுடெல்லி: கடந்த 2024-ம் ஆண்டு மகாராஷ்டிர தேர்தலின்போது காங்கிரஸ் சார்பில் தொண்டர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறும்போது, “மகாராஷ்டிர தேர்தலின்போது மத்திய உள்துறை, தேர்தல் ஆணையம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆகியவை பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டன. காங்கிரஸ் சார்பில் தொண்டர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப அனுமதி கோரப்பட்டது. ஆனால் டிராய் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது" என்று குற்றம் சாட்டினர். இந்த சூழலில் காங்கிரஸின் குற்றச்சாட்டை டிராய் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.