• September 9, 2025
  • NewsEditor
  • 0

குமுளி: பருவநிலை மாற்றத்தின்போது, முல்லை பெரியாறு அணைப் பகுதியில் கண்காணிப்புக் குழுக்கள் சார்பில் ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த மார்ச் 22-ம் தேதி மத்திய கண்காணிப்புக் குழுவும், ஜூன் 3-ம் தேதி துணைக் கண்காணிப்புக் குழுவும் ஆய்வு செய்தன. இந்நிலையில், செப்.11-ம் தேதி துணை கண்காணிப்புக் குழு ஆய்வு நடத்த உள்ளது.

இதன் தலைவராக, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கண்காணிப்புப் பொறியாளர் கிரிதர் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக முல்லை பெரியாறு அணை கண்காணிப்புப் பொறியாளர் ஷாம் இர்வின், பெரியாறு அணை கம்பம் சிறப்பு கோட்ட பிரிவின் நிர்வாகப் பொறியாளர் செல்வம் ஆகியோர் உள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *