
சென்னை: மதிமுகவில் துணை பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யா, கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார். மதிமுக துணை பொதுச்செயலாளராக பதவி வகித்தவர் மல்லை சத்யா. மதிமுக முதன்மைச்செயலாளராக துரை வைகோ பதவியேற்றது முதல் மல்லை சத்யாவுக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே மோதல் தொடங்கியது.
இதையடுத்து, கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக மல்லை சத்யா மதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும் மல்லை சத்யாவிடம் கடந்த 17-ம் தேதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்திருந்தார்.