• September 9, 2025
  • NewsEditor
  • 0

​சென்னை: தமிழகத்​தின் தென் மாவட்​டங்​களின் முக்​கிய நீரா​தா​ர​மாக விளங்​கும் முல்​லைப் பெரி​யாறு அணையை கட்​டிய பிரிட்​டிஷ் பொறி​யாளர் பென்னி குயிக் நினைவை போற்​றும்​வித​மாக அவர் பிறந்த கேம்​பர்லீ நகர​மும் மதுரை​யும் கலாச்​சார இணைப்​புத் திட்​டத்​தில் ஒருங்​கிணைக்​கப்பட உள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

18-ம் நூற்​றாண்​டில் தென் தமிழகத்​தில் மழை​யின்றி பல ஆறுகள் வறண்​ட​தால் பஞ்​சம் அதி​கரித்​தது. இதற்​காக முல்​லைப் பெரி​யாற்​றில் அணை கட்​டும் திட்​டத்தை ஜான் பென்னி குயிக் உரு​வாக்​கி​னார். கடும் பொருளா​தார நெருக்​கடிக்கு மத்​தி​யில் தனது சொத்​துகளில் பெரும்​பகு​தியை விற்று அணையைக் கட்டி முடித்​தார். இவரது நினைவை போற்​றும் வகை​யில் தேனி மாவட்​டம் கூடலூரில் மணிமண்​டபம் கட்டி தென்​தமிழக மக்​கள் வழிபட்டு வரு​கின்​றனர். மேலும், பென்னி குயிக் பிறந்த கேம்​பர்லி நகரப் பூங்​கா​வில் தமிழக அரசு சார்​பில் 2022-ல் அவருக்கு சிலை​யும் அமைக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *