
சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின், அரசுமுறை பயணமாக கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார். சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் நேற்று காலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் என பலரும் புத்தகம் வழங்கி முதல்வரை வரவேற்றனர்.