
கோவை: “அதிமுக என்ற மாபெரும் கட்சி தனி நபரை சார்ந்து இல்லை” என ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.செல்வராஜ் தெரிவித்தார்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுகவினர் புதிய மாவட்ட செயலாளரை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என கட்சி பொதுச் செயலாளருக்கு கெடு விதித்த, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனி ன் அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகிய கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன.