• September 8, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி: வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை முதல்வர் ஈர்த்து வந்ததற்கு பிரதமர் மோடிதான் காரணம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (செப்.8) அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று விட்டு இன்று தமிழகத்தில் கால் வைத்துள்ளார். முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறோம் என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்று நமது பலத்தை அங்கு காண்பித்ததால்தான் நமது 'டாடி'யால் முதலீடுகளை ஈர்க்க முடிகிறது. இதற்கு முன்னால் சென்றபோது எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தார்கள், தமிழகத்தில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு தெளிவான கணக்கு கிடையாது. எனவே, இது அவரது சாதனை அல்ல. இதற்கு முழு காரணம் பிரதமர் மோடிதான்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *