
புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை தனியார்மயத்தை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட இண்டியா கூட்டணியினர் வந்தபோது தடுத்ததால், தடுப்புகளை தாண்டி குதித்த திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி யூனியன் பிரதேசமான புதுவையில் மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு நாராயணசாமி தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் தனியார் மயமாக்கல் ஒத்தி வைக்கப்பட்டது.