
2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வென்ற ஒரே எம்பி என்பதால் அரசியல் களத்தில் தனிக்கவனம் பெற்றவர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார். ஓபிஎஸ் மகன் என்ற அடையாளம் இருந்தும், ஐந்து ஆண்டுகள் எம்பி-யாக இருந்தும் தென் மாவட்டங்களை தாண்டி ரவீந்திரநாத்தின் அரசியல் விரிவடையவில்லை. இந்த நிலையில், தனது அரசியல் பயணத்தின் தொடக்கம் முதல் செங்கோட்டையனின் பதவி பறிப்பு வரை பல்வேறு விஷயங்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் பேசினார் ஓ.பி.ரவீந்திரநாத்.
ஆர்வத்தால் அரசியலுக்கு வந்தீர்களா… வாரிசுக் கோட்டாவில் உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்ததா?