• September 8, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இலங்கை தமிழர்களிடம் பயண ஆவணங்கள் இல்லை என்றாலும் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்த நிலையில், ஆவணமற்ற இலங்கை தமிழ் அகதிகள் நீண்ட கால விசாக்களுக்கு (LTV) விண்ணப்பிக்க முடியாது என்ற தகவல் வெளியாகியாகியுள்ளது.

ஜனவரி 9, 2015 க்கு முன்பு நமது நாட்டில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களிடம், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் இல்லை என்றாலும், அவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு நமது நாட்டு சட்டப்படி அளிக்கப்படும் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *