
சென்னை: அதிமுக சார்பில் வரும் செப்.15 முதல் 17-ம் தேதி வரை 3 நாட்ளுக்கு அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செப்.15 முதல் 17-ம் தேதி வரை 3 நாட்கள், அண்ணாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும்; கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.