
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள பார்த்தசாரதி கோயிலின் பிரகாரத்தில் ஆஎஸ்எஸ் கொடியுடன் ஆபரே ஷன் சிந்தூர் பெயரில் மலர் கம்பளம் உருவாக்கிய அக்கட்சி தொண்டர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “இந்த பகுதியில் கம்யூனிஸ்ட் (சிபிஐஎம்) கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்கெனவே பல்வேறு மோதல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, அவர்களிடம் இந்த பதற்றம் நிறைந்த பகுதியில் கொடியோ அல்லது வேறு ஏதும் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் மலர் அலங்கரிப்புகளோ வைக்கக்கூடாது என்று ஏற்கெனவே அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை மீறி பாஜகவினர் இந்த மலர் கம்பளத்தை உருவாக்கியுள்ளனர்.