• September 8, 2025
  • NewsEditor
  • 0

ஊட்டி: மஞ்​சூர் – கோவை மலைப்​பாதை​யில் காரை வழிமறித்து காட்டு யானை ஆவேச​மாக தாக்​கிய​தில் கார் சேதமடைந்​தது. குழந்​தை​யுடன் சென்ற தம்​ப​தி​யினர் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பினர். நீல​கிரி மாவட்​டம் மஞ்​சூரில் இருந்து கெத்தை வழி​யாக கோவை மாவட்​டம் காரமடை மற்​றும் பெரிய​நாயக்​கன்​பாளை​யம் பகு​திக்கு சாலை செல்​கிறது. இந்த சாலை​யையொட்டி அடர்ந்த வனப்​பகு​தி​கள் மற்​றும் தேயிலை தோட்​டம் உள்​ள​தால் வன விலங்​கு​களின் நடமாட்​டம் அதி​க​மாக காணப்​படு​கிறது.

இதனால் இரவு நேரங்​களில் அந்த பகு​தி​யில் வாகன போக்​கு​வரத்துக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், சமீப நாட்​களாக அந்த பகு​தி​யில் 3 குட்டி யானை​கள் அடங்​கிய யானை கூட்​டம் சுற்​றித் திரி​கிறது. இந்த யானை கூட்​டம் கடந்த சில நாட்​களாக அந்த வழி​யாக செல்​லும் வாக​னங்​களை வழி மறிக்​கிறது. இதனால் அந்த வழி​யாக செல்​லும் வாகன ஓட்​டிகள் அச்​சத்​துடன் செல்​கின்​றனர். ஒரு சில சமயங்​களில் ஒரு மணி நேரத்​துக்கும் மேலாக சாலை​யில் அரசு பேருந்தை நிறுத்த வேண்​டிய சூழ்​நிலை ஏற்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *