
புதுடெல்லி: பாஜக எம்பி.க்களின் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கடைசி வரிசையில் அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை கவனித்தார். இதுதொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கும் பாஜகவின் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நேற்று தொடங்கியது. இதில், ஜிஎஸ்டியில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு பாஜக எம்பிக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். முதல் நாளான நேற்று இரண்டு முக்கிய கருப்பொருள்களில் கவனம் செலுத்துவது என முடிவு செய்யப்பட்டது.