
சென்னை: தமிழக பாஜக மாநில தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை தி.நகரில் பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது.
இந்த அலுவலகத்தில் 24 மணி நேரமும் போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று காலை ஒரு செய்தி வந்தது. அதில், கமலாலயத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.