
சென்னை: வானியல் அபூர்வமான முழு சந்திர கிரகணம் நேற்று நிகழ்ந்தது. கிரகணத்தின்போது, அழகிய சிவப்பு நிறத்தில் காணப்பட்ட சந்திரனை ஏராளமானோர் உற்சாகத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.