
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி, விரைவு ரயில்களில் ஓரிரு கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தாண்டு தீவாவளி பண்டிகை அக்.20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து குறிப்பிட்ட நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.
இதையடுத்து, பயணிகள் நெரிசலை குறைக்க, சிறப்பு ரயில்களை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி, விரைவு ரயில்களில் ஓரிரு கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.