
ஈரோடு: செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து 1,000-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தனர்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கெடுவிதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின், அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளைப் பறித்து பழனிசாமி அறிவித்தார். அவருடன், கோபி, நம்பியூரைச் சேர்ந்த சில நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர்.