• September 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தின் அனைத்து மாவட்​டங்​களி​லும் `நலம் காக்​கும் ஸ்டா​லின்' சிறப்பு மருத்​துவ முகாமை கடந்த மாதம் 2-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​தார். இதனை தொடர்ந்து வாரம் தோறும் சனிக்​கிழமை​களில் முகாம் நடை​பெற்று வரு​கிறது. இதன் தொடர்ச்சியாக, 5-வது வார​மாக நேற்று முன்​தினம் 35 மாவட்​டங்​களில் 35 இடங்​களில் நடந்த முகாம்​களில் 54,350 பேர் பயனடைந்​தனர். இது​வரை நடை​பெற்ற 5 மு​காம்​களில்​ 2.61 லட்​சம்​ பேர் பயன்பெற்றுள்ளனர்.

இந்த முகாம்​களில் பொது மருத்​து​வம், பொது அறுவை சிகிச்சை மருத்​து​வம், இதய மருத்​து​வம், எலும்​பியல் மருத்​து​வம், நரம்​பியல் மருத்​து​வம், குழந்​தைகள் நலம் சார்ந்த ஆலோ​சனை​கள் மருத்​துவ நிபுணர்​களை கொண்டு வழங்​கப்​படு​கிறது. பரிசோதனை​கள் மட்​டுமின்றி, மருத்​துவ காப்​பீட்டு பதிவு, மாற்​றுத் திற​னாளி​ அங்​கீ​கார சான்​றிதழ் போன்ற சேவை​களும் வழங்​கப்​படுகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *