
மானாமதுரை: நண்பர் அண்ணாமலையே கூறினாலும் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: என்னை சந்திக்கவே தயங்கும் பழனிசாமி, எங்களுடன் எப்படி கூட்டணி சேருவார்? அமித்ஷா அனைவரையும் ஓரணியில் இணைக்க முயற்சித்தார். ஆனால் பலனில்லை.
அதிமுகவைச் சேர்ந்தவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று அமித்ஷா கூறினார். அப்போது, முதல்வர் வேட்பாளர் யார் என்பதைப் பொருத்து ஆதரவு அளிப்போம் என்று நான் கூறினேன். ஓபிஎஸ் செல்போன் அழைப்பை ஏற்காமல் தவிர்த்த நயினார் நாகேந்திரன், தற்போது சமரசம் பேசப் போவதாகக் கூறுவது அகங்காரம், ஆணவத்தைக் காட்டுகிறது.