
திண்டுக்கல்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பொதுமக்களிடையே பழனிசாமி பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர்.
ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சின்னாளபட்டியில் பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் ரூ.350 கோடியில் திண்டுக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டது. இதுபோன்ற ஏதாவது பெரிய திட்டத்தை இங்குள்ள அமைச்சர் கொண்டு வந்திருக்கிறாரா? தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.