
சென்னை: ஏழை மக்களை ஏமாற்றி தான் திமுக ஆட்சியை பிடிக்க வேண்டுமா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி எண் 503-ல் தெரிவித்த ஸ்டாலின் சொன்னதை செய்தாரா? ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்தும் கிணற்றில் போட்ட கல்லாக அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் நிலுவையில் நிற்பதும், அதை நிறைவேற்றப் போவதில்லை என்பதும் மக்களுக்கு நன்கு தெரியும்.