• September 8, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: ​பாலியல் வழக்​கில் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்டுள்ள ஹாசன் தொகு​தி​யின் முன்​னாள் எம்.பி.பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு சிறையில் நூலக எழுத்​தர் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம், அவருக்கு ஒருநாள் சம்பளமாக ரூ.522 வழங்​கப்​படு​கிறது.

இதுகுறித்து சிறைத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: பாலியல் குற்​றச்​சாட்​டில் ஆயுள் தண்டனை விதிக்​கப்​பட்ட பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு பரப்பன அக்​ரஹாரா சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு இங்கு நூலக எழுத்​தர் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது. சக கைதி​களுக்கு புத்​தகம் வழங்​கு​வது, படிக்க வழங்​கப்​பட்ட புத்​தகங்​களின் பதிவுகளை பராமரிப்​பது உள்​ளிட்ட பணி​களை அவர் மேற்​கொள்ள வேண்டும். இதற்​காக அவருக்கு நாள் ஒன்​றுக்கு ரூ.522 சம்​பளம் தரப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *