
சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் தமிழகத்துக்கு வாருங்கள். உங்களால் இயன்றவரை அங்கு முதலீடு செய்யுங்கள் என்று லண்டனில் நடைபெற்ற தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவாக்க அரசு தீவிர முயற்சிஎடுத்து வருகிறது. இதற்காக, முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு சலுகைகள் அறிவிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணமும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ‘டிஎன் ரைசிங்’ என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் ஐரோப்பியநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். முதல்கட்டமாக ஜெர்மனிக்கு சென்ற அவர் பின்னர் இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டார்.