• September 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வெளி​நாடு வாழ் தமிழர்​கள் அனை​வரும் ஆண்​டுக்கு ஒரு முறை​யா​வது குடும்​பத்​துடன் தமிழகத்​துக்கு வாருங்​கள். உங்​களால் இயன்​றவரை அங்கு முதலீடு செய்​யுங்​கள் என்று லண்​டனில் நடை​பெற்ற தமிழர்​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் அழைப்பு விடுத்​துள்​ளார்.

தமிழகத்தை 2030-ம் ஆண்​டுக்​குள் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தா​ரம் கொண்ட மாநில​மாக உரு​வாக்க அரசு தீவிர முயற்சிஎடுத்து வரு​கிறது. இதற்​காக, முதலீட்​டாளர்​கள் மாநாடு, முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக பல்​வேறு சலுகைகள் அறி​விப்பு என பல்​வேறு நடவடிக்​கைகளை அரசு மேற்​கொண்டு வரு​கிறது. முதலீடு​களை ஈர்க்க முதல்​வர் ஸ்டா​லின் வெளி​நாட்டு பயண​மும் மேற்​கொண்டு வரு​கிறார். அந்த வகை​யில், தமிழகத்​துக்கு முதலீடு​களை ஈர்க்​கும் வித​மாக ‘டிஎன் ரைசிங்’ என்ற பெயரில் முதல்​வர் ஸ்டா​லின் ஐரோப்​பியநாடு​களுக்கு பயணம் மேற்கொண்டார். முதல்​கட்​ட​மாக ஜெர்​மனிக்கு சென்ற அவர் பின்னர் இங்கிலாந்​தில் பயணம் மேற்​கொண்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *