
திருநெல்வேலி: தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதால் வாக்குத் திருட்டு நடைபெறும் சூழல் உருவாகியிருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
வாக்குத்திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் ப. சிதம்பரம் பேசியதாவது: “வாக்கு எண்ணிக்கையில் பிழைகள் இருப்பது தெரியும். தோல்வி அடைந்த வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிப்பதும் நமக்கு தெரியும். சிறுபான்மையினரை, தாழ்த்தப்ப்டடவர்களை வாக்களிக்கவிடாமல் தடுப்பது தெரியும். ஆனால் வாக்குத் திருட்டு குறித்து ராகுல்காந்தி சொன்னபின்னர்தான் அனைவருக்கும் தெரிகிறது.