
புதுடெல்லி: வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம், பாஜக மீது ராகுல் காந்தி தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்து செய்தி மடல் வடிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பல்வேறு மாநில தேர்தல்கள் மற்றும் பிஹார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி குறித்து மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது காங்கிரஸ் கட்சி.