
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறிய கிராமம் குள்ளம்பாளையம். இந்த ஊராட்சியின் தலைவராக இருந்த 25 வயது இளைஞரை, எம்ஜிஆர் என்ற காந்தம் ஈர்த்துக் கொண்டது. அதன் விளைவாக, அதிமுகவில் 1972-ல் தொடக்கிய அந்த இளைஞரின் அரசியல் பயணம், இப்போது வரை தடம் மாறாமல் தொடர்ந்து வருகிறது. அதிமுக வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாய் மாறி நிற்கும் அந்த இளைஞர்தான் கே.ஏ.செங்கோட்டையன்.
கேஏஎஸ் என்று அரசியல் வட்டாரத்தில் அழைக்கப்படும் செங்கோட்டையனின் 50 ஆண்டுகளைக் கடந்த அரசிய பயணம், தமிழக அரசியல் வரலாற்றின் பல பக்கங்களை நிறைத்து நிற்கிறது.