
அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி சுற்றுப்பயணத்தின்போது, தென் மாவட்டங்களை சேர்ந்த வர்த்தகர்கள், தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள், ஆர்வமாக சந்தித்து தங்கள் குறைகளையும், பிரச்சனைகளை வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் பகிர்ந்து வருகிறார்கள். மதுரையில் முக்கியமான சங்கங்கள் உள்ளிட்ட 87 சங்க நிர்வாகிகள் அவரை சந்தித்துள்ளதால், திமுக ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளாக அவர்கள் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் தீர்க்கப்படாததின் வெளிப்படா? என்ற கேள்வி எழுந்துள்ளது.